Sunday 3 April 2011

கவிதை என்றால் இப்படி இருக்கனும்-3- நன்றி ஆனந்த விகடன்

 


























 ஸ்மைலி
பற்கள் தெரிவதுபோல் சிரிப்பது
புருவம் உயர்த்திக்
கண்களால் சிரிப்பது
ஒற்றைக் கரத்தில்
முகம் புதைத்துச் சிரிப்பது
வெட்கித்
தலை குனிந்து சிரிப்பது
உதடுகளை வில்லென
வளைத்துச் சிரிப்பது
இவற்றில் எந்த வகை
நீ மின்னஞ்சலில் அனுப்பியது?
- ராகவ்
உயிர்ப்பு
பிள்ளையார் சிலையின்
தலையை உடைத்துவிட்டு
தலை குனிந்து நிற்கிறாள்
நேஹா.

அம்மா அடிப்பாளென
ஓரக் கண்ணில் துளிர்க்கிறது
சிறு துளி.

அம்மா பார்த்துவிடாதபடிக்கு
தலையைத் தூக்கிக்கொண்டு
தூணுக்குப் பின் மறைகிறார்
உடைந்த பிள்ளையார்!
- லதாமகன்
நிழல்களுடன் பேசுபவன்
விடைபெறல் அவ்வளவு
எளிதாய் நிகழ்வது இல்லை
ஒரு கையசைப்பு போதும்
கடைசி வரை உள்ளிருக்க!
- நிலா ரசிகன்  
வரையப்படுவதெல்லாம் வரைபடங்கள் அல்ல!
குழந்தை
வானம் வரைந்தது
நட்சத்திரங்களும்
நிலவும்
தானாய் வந்தன.

குழந்தை
வனம் வரைந்தது
பறவைகளும்
பட்டாம்பூச்சிகளும்
தானாய் வந்தன.

குழந்தை
நதி வரைந்தது
கூழாங் கற்களும்
குட்டி மீன்களும்
தானாய் வந்தன.

குழந்தை
கோயில் வரைந்தது
கடவுளும் பக்தர்களும்
தானாய் வந்தனர்.

குழந்தை வரைவதெல்லாம்
வந்துகொண்டே இருந்தது
குழந்தை வரைவதை
நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கையில்
இன்னும் வரை
இன்னும் வரை
ஏதாவது வருகிறதா பார்ப்போம்
என்று சொல்லியபடியே வந்தனர்
குழந்தையின் அம்மாவும் அப்பாவும்
ஆசிரியரும் பிரம்பும்.

இத்தனைக்கும் குழந்தை
வீட்டையோ,
பள்ளியையோ
வரையவே இல்லை!
- வே.விநாயகமூர்த்தி
ஓர் ரகசிய புகைப்படம்
நான் குழந்தையாய்
தவழ்ந்தபோது
எடுத்ததென
அம்மா மாட்டிவைத்திருக்கிறாள்
அழகிய புகைப்படம் ஒன்றைக்
கூடத்தில்.

குலதெய்வம் கோயிலுக்கு
மொட்டை போட்டதெனச் சொல்லி
தொங்குகிறது ஒரு படம்
நான் அழுத முகத்துடன்.

பூப்புக்குச் சீர்செய்த
அலங்காரத்தில்
பட்டுத் தாவணி சலசலக்கும்
புகைப்படம்
நிரப்பிக்கொண்டு இருக்கிறது
வெட்கத்தை அறை முழுக்க.

நான் எங்கே இருக்கிறேன்
கண்டுபிடியுங்கள்
எனக் கேட்டு
விருந்தினர்களோடு
விளையாடுவதற்கு என்றே
வைத்திருக்கிறேன்
இரண்டாம் வகுப்பில் எடுத்த
குரூப் புகைப்படத்தை
அலமாரியில்.

திருமணத்துக்கென
ஜாதகத்துடன் அனுப்பப்பட்டு,
'மன்னிக்கவும்’ என்ற
ஒரு வரிக் குறிப்புடன்
திரும்ப வரும் புகைப்படங்கள்
கிடக்கின்றன
கடித உறைக்குள்ளேயே
யாருக்கும் பார்க்க
மனமின்றி!
- ரேணுகா சூரியகுமா

0 comments:

Post a Comment