Sunday 15 May 2011

62 ஆண்டு இந்திய குடியரசு!!!மிக முக்கியமான கட்டுரை

01-02-11 நக்கீரன் வெளியீடு


                 வஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர், சர்தார் வல்ல பாய் படேல் ஆகியவர்கள்தான் நவீன இந்தியாவை வடிவமைத்த சிற்பிகள்.  இந்தியாவின் அயல்நாட்டு கொள்கை, ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், போன்றவற்றை உருவாக்கியவர் நேரு.  இந்தியாவின் மக்களாட்சி, சுதந்திரமான நீதித்துறை, இந்திய அரசின் மதசார்பின்மை, ஆகியவற்றை வடிவமைத்தவர் அம்பேத்கர்.  வல்லபாய் படேல் பல சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இந்தியா என்ற ஒரு முழுமையான நாட்டை உருவாக்கியவர். வல்லபாய் படேல் நவீன இந்தியாவை உருவாக்க, அம்பேத்கர் உலகின் மிகப்பெரிய அரசியலமைப்பை தயாரிக்க, நேரு ஐந்தாண்டுத்  திட்டத்தை இயற்ற இளம் இந்தியா உருவானது. அமெரிக்காவும் இங்கிலாந்தும் இந்தியாவுக்கு உதவ மறுக்க சோவியத் ரஷ்யா  (கம்யூனிஸ நாடு) பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. இந்தியாவில் அணுமின் நிலையங்களை நிறுவ, முதல்  செயற்கைகோள் வடிவமைக்க, ஐந்தாண்டுத் திட்டங்களை செயல்வடிவம் கொடுக்க ( உலகில்  ஐந்தாண்டு திட்டங்களை  அமுல்படுத்திய முதல் நாடு சோவியத் ரஷ்யா) உதவியது. முதல் நாற்பது வருடங்கள் (1950 முதல் 1990 வரை) சோவியத் ரஷ்யாவை  சார்ந்தி ருந்தோம். அந்நாட்டின் சமதர்ம பொருளாதாரம் கூட நேருவை கவர்ந்தது. அதனாலேயே நமது பொருளாதாரம் ஒரு கலப்பு  பொருளாதாரம் என்றாலும் (அரசு துறையும் தனியார் துறையும் சேர்ந்து பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுவது), அதில் ரஷ்ய  நாட்டை பின்பற்றியதால் பொதுவுடமை கொள்கைகளின் தாக்கங்கள் அதிகம் இருந்தன. அதனால்தான் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் பல  நிறுவி, "அவைகள் இந்தியாவின் கோயில்கள்' என்றார் நேரு. அதே காலக்கட்டத்தில் இந்தியாவின் முதல் செயற்கை கோள் ஆரிய பட்டா  1975- இல் சோவியத் ரஷ்யா உதவியுடன் வெற்றி கரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் முதல் வின்வெளி வீரரான ராகேஷ்  சர்மா  1984-ஆம் ஆண்டு ரஷ்ய ராக்கெட்டில் விண்ணில் பறந்தார். ஐந்தாண்டு திட்டங் கள் ரஷ்ய பொருளாதார நிபுணர்கள் உதவியுடன்  செயல்படுத் தப்பட்டன.

இப்படி அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டாலும் நாடெங்கும் வறுமை ஆதிக்கம் செலுத்தியது. உணவு பற்றாக்குறையினால் உணவுப் பொருட்கள்  இறக்குமதி செய்யப்பட்டன.

அப்போதுதான் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டுமென்ற சிந்தனை மேலிலிட்டது. அதன்  விளைவு அமெரிக்க விஞ்ஞானி நார்மன் போர்லாக் ( இந்திய பசுமை புரட்சியின் உண்மையான தந்தை) கண்டுபிடிப்பை பின்பற்றி, 1965-இல் பசுமை புரட்சி  நடத்தப்பட்டது. உணவு உற்பத்தி அதிகரித்தது. 1980 வாக்கில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது.

ஹோமி பாபாவின் முயற்சியில் 1967-இல் இந்திய அணுத் திட்டம் துவக்கப்பட்டது. 1974-இல் ராஜஸ்தான் பாலைவனம் பொக்ரான் என்ற இடத்தில் இந்தியாவின் முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை  சிரிக்கும் புத்தர் என்ற பொன்மொழியுடன் நடத்தப்பட்டது. இன்னொருபுறம் இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையம் 1969-இல் நிறுவப்பட்டு  இந்திய செயற்கைகோள்கள், ராக்கெட் தொழில்நுட்பங்கள் உருவாக் கப்பட்டன. இவ்வாறு அணுசக்தி, விண்வெளித்திட்டங்கள், ஆயுதங்கள்  உற்பத்தி போன்றவற்றில் தன்னிறைவை பெற்றோம்.

வங்கிகள்  நாட்டுடமையாக்கப்பட்டன. அதனால் சேமிப்புகளும் முதலீடுகளும் பெருகின.  அதேபோல பொதுத்துறை நிறுவனங்கள் நாடெங்கிலும் துவக்கப்பட்டன. மாநில அரசு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. கூட்டுறவு  அமைப்புகள் உருவாகின. இவையெல்லாம் ஏராளமான அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தன. அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. தொழிலாளர்களுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு வழங்கப்பட்டன. ஓய்வூதியத் திட்டங்கள், பணி நிரந்தரம்,  தொழிலாளர்களுக்கான மருத்துவமனைகள், தொழிற்சங்க உரிமைகள் போன்றவைகள் நடைமுறைப் படுத்தப்பட்டன.

இன்னொருபுறம் கல்விக் கொள்கைகள் தீட்டப்பட்டன. பள்ளி, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்விகளில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டன.  நாடெங்கிலும் அரசின் ஐ.டி.ஐ பயிற்சி நிறுவனங்களை அரசே நிறுவியது. என்.ஐ.டி, ஐ.ஐ.டி, போன்ற இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி  நிறுவனங்கள்  நாடெங்கிலும் துவங்கப்பட்டன. அவற்றில் இன்று உலக தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றன. இன்று நமது நாட்டின்  ஐ.ஐ.டி மற்றும் பல்கலைக்கழகங்கள் உலக அளவில் சிறந்த கல்வியை வழங்கி வருகின்றன. அதேசமயம் இன்று பல நாடுகளின் செயற்கைகோள்களை (ஒரே ராக்கெட் மூலம் பத்து செயற்கைக்கோள்) ஏவி வருகிறோம். விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து  வருகிறோம். நமது சந்திரயான் நிலவில் தண்ணீரை கண்டுபிடித்துள்ளது. நவீன ரக டாங்கிகள், ஆகாஷ், பிரமோஷ் ஏவுகணை, இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான அரிஹன்ட் தயாரிக்கப்பட்டன. உலகளவில் சாப்ட்வேர் உற்பத்தி யில் முன்னணி வகிக்கிறோம். இவ்வளவு ஏன் இன்று உலக பணக்காரர்களின் வரிசையில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர். இருந்தாலும் இந்தியா ஒளிரவில்லை ஏன்?

1996- இல் நரசிம்மராவ் எனும் நவீன சாணக்கியர் பிரதமராக இருந்தபோது  கொண்டுவரப்பட்ட தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல் கொள்கையிலிலிருந்து இந்தியாவின் வீழ்ச்சி தொடங்கியது. நேருவும்,  இந்திராகாந்தியும் போற்றி பாதுகாத்த பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகள் திட்டமிட்டு, குறைக்கப்பட்டன. அதன் பங்குகள் தனியாருக்கு  விற்கப்பட்டன. இன்னும் சில தொழில் உற்பத்தி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. அரசின் புதிய தொழிற் கொள்கைகள் உருவாக்கப்பட்டு,  பொது சேவையை நோக்கமாக கொண்ட பொதுத்துறை நிறுவனங்களில் பல தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. இதனால் அரசு  வேலை வாய்ப்புகள் குறைந்து தனியார் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதனால்தான் இன்று பல மாநில முதல்வர்கள் தனியார்  நிறுவனங்களுக்கான ஆட்களை பிடித்துத் தரும் பணியில் இறங்கிவிட்டனர். மத்தியப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போன்றவை குறைந்த அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. ஆனால் மத்திய , மாநில அரசுகளில் லட்சக் கணக்கான காலிலியிடங்கள் இன்னும்  நிரப்பப்படாமல் உள்ளன. அதைப் பற்றி இவர்களுக்கு அக்கறையில்லை. பல  ஆயிரக்கணக்கான பேரை மத்திய, மாநில காவலர் படைகளுக்கு மட்டும் ஆண்டுதோறும் பணியில் சேர்த்துக் கொள்கின்றனர். தங்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராடும் மக்கள்மீது ஏவ இந்த காவல்கள் பயன்படுத்துகின்றனர். இன்னொருபுறம் தனியார் நிறுவனங்கள் ஏராளமான வேலைவாய்ப்புகளை அள்ளி தருவதாக நாளிதழ்களில்  பகிரங்கமாக பொய் சொல்கின்றனர். இன்றைக்கு அரசின் இலவச மின்சாரத்தையும், பல கோடி வங்கிக் கடன்களையும்,  சலுகையாக வாங்கப்பட்ட நிலங்களையும் பயன்படுத்தும் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களை மதிப்பதில்லை.  பணி நிரந்தரம், பணியாளர் சலுகைகள் என எதுவும் வழங்க மறுக்கின்றன. இதனை ஏன் என்று கேட்க மாநில அரசுகளுக்கு  தைரியமில்லை. மாறாக தொழிலாளர் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீது காவல் துறையை ஏவுகின்றன.

உணவு உற்பத்தியும் வறுமையும்

இன்றைய இந்தியா உணவு உற்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது பெரும் சாதனையாகும். ஆனால் இன்று இந்தியாவில்  வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் 6.5 கோடிபேர். இதில் 2.5 கோடி பேர் ஏழைகளிலும் ஏழைகள். உலக அளவில் ஊட்டச்சத்து  குறைபாடு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. 7.4 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் வாழ்கின்றனர் என யுனிசெப் அறிக்கை 2010 தெரிவிக்கிறது.  ஏன் இந்த முரண்பாடு. ஆண்டுதோறும் இந்திய உணவு கார்ப்பரேஷன்  கழகங்களின் சேமிப்புக் கிடங்குகளில் பல கோடி மதிப்புள்ள உணவுப்பொருட்கள் பாழாகி வீணாகிப் போகின்றன. மறுபுறம் ஏழை மக்கள் வறுமையின் கோரப்பிடியில் வாழ்கின்றனர். இந்தக் கொடுமையை பொருளாதார அறிஞர் அமர்த்தியாசென் வன்மையாக கண்டித்தார். ஆனாலும் மத்திய அரசு வீணாகும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாக கொடுக்க மறுக்கிறது. இதனை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டுமென  மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. மத்திய மாநில  அரசுகள், இந்திய உணவு கார்ப்பரேஷன் முதலிலியவற்றிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டது. "இந்திய அரசியல் சட்டத்தின் 21- அ பிரிவில்  வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமை' என்பது உணவு உரிமையையும் உள்ளடக்கும் என உச்சநீதிமன்றம் கூறி ஏழைகளுக்கு இலவசமாக  உணவு தானியங்களை வழங்க கூறியது. ஆனால் ஆளும் காங்கிரஸ்  அரசு இலவசமாக வழங்க மறுத்துவிட்டது. அதேசமயம் உலகில்  சிறிய நாடுகள்கூட பட்டினி ஒழிப்புத் திட்டங்களை சிறப்பாக நடைமுறைபடுத்தி வருகின்றன. உதாரணமாக, பிரேசில் ஏழை  மக்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 பில்லிலியன் டாலரும், எகிப்து 2 பில்லிலியன், மெக்சிகோ 1.5 பில்லிலியன் டாலரும்  ஒதுக்கியுள்ளன. அமெரிக்காவின் ஒபாமா அரசு சத்துணவு உதவித் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 31.6 மில்லிலியன் பேருக்கு உணவு கூப்பன்கள்  அளித்து வருகிறது. இதையெல்லாம் பார்த்தால் இந்திய அரசு ஏழைகளின் மீது எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை என்பது நன்றாகவே புரியும்.

மாறாத கல்விக் கொள்கை

125 ஆண்டுகளுக்கு முன்னர் மகாத்மா ஜோதிராவ் பூலே ஆங்கில அரசின் ஹண்டர் கமிஷனை கடுமையாக விமர்சித்தார். ""ஆங்கில அரசு  கல்விக்கென செலவிடும் பணம் முழுவதும் பார்ப்பனர் மற்றும் இதர உயர் சாதியினருக்கே சென்றடைகிறது. ஆனால் இந்த நிதியானது  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பிலிலிருந்தே ஆங்கில அரசு பெற்றது. இம்மக்களோ அறியாமையிலும்  ஏழ்மையிலும் உழல்கின்றனர். இம்மக்களுக்கு நவீன கல்வி வழங்க ஆங்கில அரசு பெறுகிறது''  என்றார். அவர் கூறிய கருத்துகள் நாடு விடுதலை  அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும் ஆங்கில அரசின் கொள்கையை மறைமுகமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பின்பற்றி  வருகிறது. இதன் வெளிபாடுத்தான் இன்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக பின்பற்ற ஐ.ஐ.டி,  ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்கள் மறுக்கின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகின்றது. இந்த கல்வி  நிறுவனங்களில் அவ்வளவு சுலபத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை படித்து விடமுடியுமா? விசாரித்து  பாருங்கள் தெரியும். இந்தக் கல்வி நிறுவனங்கள் மீது தொடர்ந்து அதிகளவிலான புகார்கள் எழுந்து வருகின்றன. இதைவிட பள்ளிக்கல்வி மிக மோசமான  நிலையில் உள்ளது. நாடு முழுவதும் அரசு பள்ளிகள்            குறைவான தரங்களிலேயே செயல் படுகின்றன. தரம் உயர்த்து வதில் மாநில  அரசுகளுக்கு அக்கறையில்லை. சமச்சீர் கல்வி பாடநூல்கள் அதிக விலையில் கலரில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் தரத்திலும்  உள்ளடக்கத்திலும் எவ்வித முன்னேற்றமுமில்லை. தமிழ்நாடு சமச்சீர் கல்வி நூல்களை அச்சிடும் பதிப்பகங்களுக்கு வேண்டுமானால் நல்ல  லாபம். கடந்த ஆண்டு  ஓய்வுப் பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் செய்தது. அதனை  தமிழகத் தில் 90 சதவீத பள்ளிகள் ஏற்றுக் கொள்ள வில்லை. குழுவின் தலைவர் மாறியதுதான் மிச்சம். ஒன்று அரசு பள்ளிகள்  தரம்  உயர்த்த வேண்டும். இல்லையெனில் தனியார் பள்ளி களுக்கான கட்டண நிர்ணயத்தை துணிச்சலாக அமுல்படுத்த வேண்டும். அரசுக்கு  லட்சக் கணக்கான குழந்தைகளின் நியாயமான கல்விதான் முக்கியமே தவிர சில ஆயிரக் கணக்கான பள்ளிகளின் நிர்வாகமல்ல. தமிழகத்தின் அமைச்சரவை மக்களுக்கு கட்டுப்பட்டது என்று இந்திய அரசியல் சாசனம்  கூறுகிறது. 6 முதல் 14 வயது வரை  இலவசக் கல்வி அளிக்க ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி செலவாகுமே என பிரதமர் வருத்தப்பட்டு கூறுகிறார். ஆனால்   ராணுவத் துக்கு ஆண்டொன்றுக்கு 1. 5 லட்சம் கோடிக்கு அதிகமாக செலவிடப்படுகிறது. "ஆரம்பக் கல்விதான் நாட்டின் எதிர்கால சந்ததிகளுக்கு  நாம் தரும் தன்னம்பிக்கை என காந்தியடிகளும் ரவீந்தரநாத் தாகூரும் கூறிய கருத்துகளை இங்கு யாரும் ஏற்றுக்கொண்டதாக  தெரியவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கியூபா நாடு அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வியை கல்லூரி வரை  வழங்குகிறது. அந்நாட்டில் வழங்கப்படும் கல்வி உலக தரம் வாய்ந்தது. கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஒரு மாதத்தில்  அதிக  நாட்களை மாணவர்களுடனேயே கழிக்கிறார். சினிமா தியேட்டரிலோ கிரிக்கெட் மைதானத்திலோ அல்ல.

பொதுசுகாதாரமும் காப்பீடும்

குழந்தை பிறப்பின்போது இறக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் எண்ணிக்கை சீனா, இலங்கையை விட  பலமடங்கு இந்தியாவில் அதிகம். நாடு  முழுவதும் ஆரம்பச் சுகாதார நிலையங்களின் செயல்பாடு ஆரோக்கியமாக இல்லை. நாடெங்கும் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில்  போதிய மருத்துவர்கள் இல்லை. வழங்கப்படும் மருந்துகள் தரம் அவ்வளவாக சரியில்லை. பொது மருத்துவமனைகளின் சுகாதாரம் கால்நடை  மருத்துவமனைகளுக்கு நிகராகவே உள்ளது. இவைதான் நாடெங்கிலும் உள்ள அரசு மருத்துவ மனைகளின் நிலை. சீனாவில் மருத்துவ  கல்வி மாணவர்கள் கட்டாயம் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்யவேண்டும். அங்கு அந்த திட்டம் மாசேதுங் ஆட்சி காலத்திலிலிருந்து நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற  விதிமுறையை டாக்டர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது கொண்டு வந்தார். அதனாலேயே  பொறுப்பற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்களாலும் மக்கள் விரோத அரசியல்வாதி களாலும் விமர்சிக்கப்பட்டார். அந்தத் திட்டம்  கைவிடப்பட்டது. ஆனால் இன்றைக்கு மத்திய மாநில அரசுகள் பொது மருத்துவமனைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி நல்ல மருத்தவ  வசதியினை தராமல், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகின்றன. இதனால் நாடெங்கிலும் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளும் அரசின் பணமும் அதிகளவில் செல்கின்றன. ஆனால் அமெரிக்கவில் பராக் ஒபாமா, நாட்டில் மருத்துவ காப்பீடு  மூலம் தனியார் மருத்துவ மனைகள் அதிகளவு ஆதிக்கம் செய்வதையும் மக்களுக்கு சாதாரண மருத்துவச் சிகிச்சை தருவதில்கூட அதிகளவு  மருத்துவக் கட்டணங்களை விதிப்பதையும் எதிர்த்து, பல எதிர்ப்பு களையும் மீறி சுகாதார  நல சட்டத்தினை சென்றாண்டு கொண்டு வந்தார்.  தனியார்  மருத்துவமனைகளின் ஆதிக் கத்தை கட்டுபடுத்தினார். அதனாலேயே அவர் பொதுவுடமை வாதியென அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டின. ஆனால் இங்கு அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்துவதை  விட்டுவிட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசின் நிதியை மருத்துவ காப்பீட்டுத் தொகையாக வாரி வழங்கப்படுகின்றது.

மாறி வரும் அயல்நாட்டும் கொள்கைவிடுதலை பெற்ற இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை மிகச் சிறப்பானது. குறிப்பாக இனவெறிக்காக போராடிய தென்ஆப்பிரிக்காவின்  நெல்சன் மண்டேலாவை ஆதரித்தோம். இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தோம். அதோடு விடுதலைப்புலிலிகள்  இயக்கத்துக்கு இந்திய ராணுவமே ஆயுத பயிற்சியும் வழங்கியது. இஸ்ரேலிலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை கண்டித்த இந்தியா, பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்தை ஆதரித்தது. வங்காள தேசத்தின் முஜிபுர் ரகுமானை ஆதரித்தோம். நேபாளம் நாட்டில் ஜனநாயக  அரசு உருவாக வேண்டுமென எண்ணினோம். மியான்மரில் ( பர்மா) ராணுவ ஆட்சியை எதிர்த்து, ஆங்சாங் சூச்சிக்கு ஆதரவாக குரல்  கொடுத்தோம். ஆக இருபது வருடங்களுக்கு முன்னால் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை என்பது நாடுகளின் தேசிய விடுதலை  போராட்டத்திற்கு ஆதரவாகவும், அணிசேரா நாடுகளை வழி நடத்துவதிலும் இந்தியா ஈடுபட்டது. அதனால்தான் அமெரிக்காவின் எதிர்ப்பை  மீறி கியூபா நாட்டின் அதிபரும் உலக புகழ்பெற்ற புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவை டெல்லிலிக்கு அழைத்து, உச்சி மாநாட்டை  நடத்தினார் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி. ஆனால், இன்றைக்கு இந்தியாவின் அயல்நாட்டு கொள்கை தலைகீழாக மாறிவிட்டது.  பாலஸ்தீனிய மக்களின் உரிமை போராட்டத்திற்கு எதிராக இஸ்ரேலை ஆதரிக்கிறோம். நேபாள நாட்டின் மன்னருக்கு மறைமுகமாக  உதவி செய்கிறது இந்தியா. இலங்கையில் நடந்து முடிந்த தமிழின அழிப்பில் சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்தோம். சர்வதேச போர்  குற்றவாளியான ராஜபக்சே வுக்கு ஆதரவாக ஐ.நா சபையில் பேசினோம். இன்று மியான்மரில் ராணுவ ஆட்சியை ஆதரித்துக் கொண்டு  ஆங்சாங் சூச்சியை வெறுக்கிறோம். 1976-இல் இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயன்ற  அமெரிக்கா இன்று வர்த்தக நண்பன். இப்படி இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கை 1990 -க்கு பிறகு பெருமளவில் மாறிவிட்டது. இதனால் இன்று  இந்தியா தனது அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவு நிலவவில்லை. நாம் அமெரிக் காவுக்கு ஆதரவாக சீனாவை உளவு பார்க்கிறோம்.  இதனாலேயே சீனா இந்தியாவை தொடர்ந்து சீண்டி வருகிறது.

இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகளில் கடந்த 62 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 1947-இல் ஐ.நா. சபை  ஆணைக்கிணங்க பொதுமக்கள் வாக்கெடுப்பை (சட்டசபை தேர்தல் அல்ல) நடத்தவில்லை. அதனால் காஷ்மீர் பிரச்சினை 64  ஆண்டுகளாக எரிந்து கொண்டுள்ளது. மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்களுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் புறக்கணித்ததால் நாகலாந்து, அசாம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் அரசுக்கெதிரான ஆயுத போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், சிவசேனா, சிமி, போன்ற மத தீவிரவாத அமைப்புகளால் நாட்டில் மதக்கலவரங்கள் அவ்வப்போது நடந்துவருகின்றன. மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களின் நிலங்களை கைப்பற்றிக் கொண்டு அவர்களை துரத்துவதால் அந்தப் பகுதிகளில் மாவோயிஸ்ட் அமைப்பு அரசுக் கெதிரான ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிறது. மத்திய அரசுப் படைகள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின் பேரில் ஏழை, பழங்குடியினர் மீது மிகப்பெரிய மோசமான தாக்குதலை நடத்தி வருகின்றன. இது ஒருஅப்பட்டமான உள்நாட்டு போராகும். இந்த கொடுமையை உலகளவில் மனித உரிமை அமைப்புகள் கடும்  கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என கூறிக் கொண்டு சொந்த நாட்டு மக்களின் மீது போர்  தொடுப்பது மிக வேதனையான விஷயம். இந்தக் கொடுமைகளுக்கு எதிராக பேசும் மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்,  கந்தியவாதி அசோக்குமார், சமூக சேவையாளர் சுவாமி அக்னிவேஷ், எழுத்தாளர் அருந்ததி ராய், முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார், அருணா ராய், மேதாபட்நாகர் போன்றோர்கள் மீது இன்று இந்திய அரசு அடக்குமுறைகயை ஏவுகிறது. அல்லது மிரட் டப்படுகிறது. இதுதான் இன்றைய உண்மையான இந்தியா வின் நிலை.

இன்று மக்கள் ஓட்டுப் போடுவதற்கு மட்டும் பயன் படுத்தப்படுகிறார்கள். மற்றப்படி பெரும் செல்வந்தர்களின் விருப்பு வெறுப்புக்கு தக்கவாறு அரசு கொள்கைகளை வகுக்கின்றது. கல்வி நிறுவன அதிபர்களுக்கு பணம் முக்கியம்; கல்வி கற்கும் மாணவர்கள் முக்கியமில்லை.  கார்ப்பரெட் நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது. முறையாக மின்கட்டணம் செலுத்தும் மக்கள் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அவதிக்கு உள்ளா கின்றனர். இந்தியாவின் அரசியலமைப்பின் முகவுரையில் "இந்தியா ஒரு சோஷலிலிச ஜனநாயக மதசார்பற்ற  குடியரசு' என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இவையெல்லாம் பார்க்கும் போது இந்த சொற்றொடர் மட்டுமே மெல்ல மெல்ல கேள்விக்குறியாகி வருகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :
கருத்துக்கள்(3)
Name : Mrs.M.Anandapriya Date & Time : 4/4/2011 12:25:46 PM
-----------------------------------------------------------------------------------------------------
இந்த செய்தியை படிக்கும் பொது பண்டைய இந்தியா முகமது கஜினி, கோரி, ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்டு சின்னபின்னமக்கபட்டதை விட தற்போதைய இந்தியா வின் வளமும் ,மனித வளமும் சுயநல, திறமை இல்லாத, தேசப்பற்றில்லாத, பேராசை, பண வெறி பிடித்த குற்றvaaளிகலான arasialvaathigalinal சுரண்டப்பட்டு கையாலாகதவர்களாய் இருப்பதை எnnnuம்போது திலகர், காந்தி, நேரு, அம்பேத்கர், படேல் ஆகியோரின் உழைப்புக்கு அர்த்தமில்லாமல் மக்கள் நிர்கதியாய் நிர்ப்பதே உண்மை.
-----------------------------------------------------------------------------------------------------
Name : mujibur Date & Time : 3/8/2011 10:06:45 AM
-----------------------------------------------------------------------------------------------------
when congress will be withdraw from indian people india will be win the world no1 country .congress demolish this country economy last 60 years
-----------------------------------------------------------------------------------------------------
Name : Tamilan Date & Time : 3/3/2011 5:04:03 PM
-----------------------------------------------------------------------------------------------------
good
-----------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment