Wednesday 29 June 2011

லூயிஸ் பிரெய்ல்[ Louis Braille]

 அவருக்கு கண் பார்வை கிடையாது. இருந்தாலும், தனது கண்டு பிடிப்பால் பார்வைத் திறனற்ற பலரின் வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டி இருக்கிறார். அவர்தான் லூயிஸ் பிரெய்ல். அவர் கண்டுபிடித்ததுதான் பிரெய்ல் எழுத்துமுறை.  
லூயிஸ் பிரெய்ல், மூன்று வயதில் அப்பாவின் தொழில் சார்ந்த உபகரணங் களை வைத்து விளை யாடிக்கொண்டிருந் தான். அப்போது, எதிர்பாராத விதமாக அவனது கண்ணில் கூர்மையான ஆணி குத்திவிட்டது. அதனால், அந்தக் கண்ணின் பார்வை பறிபோனது. உரிய  சிகிச்சை அளிக்கா ததால் கொஞ்ச நாட்களில் அவனது இரண்டாவது கண்ணின் பார்வை யும் போய் விட்டது.

கண் பார்வை முழுவதும் பறிபோனதால், பிரெய்லின் பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர். இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டு... பிரெய்லை பாரீஸில், பார்வையற்றோருக்கு என செயல்பட்டு வந்த சிறப்புப் பள்ளியான 'ராயல் இன்ஸ்டிடிட்யூட்’டில் சேர்த்தனர்.
அங்கு, கல்வி என்பது வாய் மற்றும் செவிவழிக் கல்வியாகவே இருந்தது. ஒருவர் படித்துக் காட்ட, அவற்றை மனப் பாடம் செய்து படிக்கவேண்டும். மேலும், பார்வையற்றோர் படிப்பதற்கு அச்ச டிக்கப்பட்ட புத்தகங்கள்  'புடைப்பு’ முறையில் அச்சடிக்கப் பட்டு இருந்தன. அந்தப் புத்தகங்களின் பக்கங்கள் சற்று மேடாக அச்சாகி இருக்கும். இதனால், புத்தகங்கள் மிகவும் தடிமனாகவும். கனமாகவும், எளிதில் எடுத்துச் செல்ல இயலாத வகையிலும் இருந்தன. மேலும், இந்தவகை எழுத்து களைப் பார்வை அற்றவர்கள் எளிதில் எழுதவும் முடியாது.  
இந்தப் புத்தகங் களைப் பயன்படுத்தித் தனது கல்வியைத் தொடர்ந்த பிரெய்ல், பார்வையற்றோர் சிக்கல் இன்றி எளிதில் படிக்கவும், புரிந்து கொள்ளவும், எழுதவும் எளிதான ஒரு முறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று, நாளும் பொழுதும் உழைக்கத் தொடங் கினான்.
அந்தச் சமயத்தில், பிரெஞ்சு ராணுவத்தினர் தங்களுக்குள் ரகசியத் தகவல்களை அனுப்ப 'சார்லஸ் பார்பியர்’ என்ற ராணுவ அதிகாரி உருவாக்கிய எழுத்து முறையைப் பயன்படுத்திவந்தார்கள். இந்த சங்கேத எழுத்து முறையை ராணுவ வீரர்கள் இருளில்கூட கைகளால் தடவிப் பார்த்து எளிதாகப் புரிந்து கொண்டார்கள். இந்த எழுத்து பற்றி அறிந்த லூயிஸ் பிரெய்ல், இந்த எழுத்து முறையின் அடிப்படையை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் இருந்து பார்வை அற்றோர் எளிதில் புரிந்துகொள்ளும் புதியதொரு எழுத்துரு வகையை உருவாக்க முடியும் என முடிவு செய்தார்.  
ஆறு புள்ளிகளை சற்று மேடாக அமைத்து, பிரெய்ல் தனது கடின உழைப்பால் 1825-ஆம் ஆண்டு பார்வையற்ற வர்களுக்கான புதிய எழுத்து முறையைக் கண்டுபிடித்தார். அதை, தான் படித்த  ராயல் இன்ஸ்டிடிட்யூட் நிறுவனத்துக்கே  அளித்தார். அப்போது, அவருக்கு வயது பதினாறுதான். ஆறு புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட குறியீட்டின் மூலம் பிரெஞ்சு, ஆங்கில எழுத்துகளை எளிதில் எழுதப் படிக்க முடிந்தது. இருந்தாலும்... பிரெய்லின் இந்த சிறப்பான கண்டுபிடிப்பு, நூறு ஆண்டுகளுக்குப் பிறகே உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது.  
பிரெய்லின் இந்த எழுத்துமுறை, பார்வை அற்றவர்களுக்கு மிகப் பெரும் வரமாக அமைந்தது. எனவேதான், அவரது பெயராலேயே அம்மொழி அழைக்கப்பட்டு வருகிறது.
சிறு வயதிலேயே தனது பார்வையை இழந்துவிட்டபோதிலும், விடாமுயற் சியுடன் கல்வி கற்றதையும்,  தற்செயலாகத் தெரிந்துகொண்ட  ராணுவ ரகசிய எழுத்து முறையைப் பின்பற்றி, பார்வையற்றோர் எளிதில் படிக்க வசதியான, முற்றிலும் எளிதான எழுத்து முறையை உருவாக்கிய முயற்சி போற்றத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment